“பத்தே நிமிஷத்துல பர்சனல் லோன் தர்றோம்”பலர் பர்ஸை காலி செய்த கூட்டம் -ரிலையன்ஸ் கம்பெனி என்று ரீல் விட்டு பல கோடியுடன் ஓட்டம்

 

“பத்தே நிமிஷத்துல பர்சனல் லோன் தர்றோம்”பலர் பர்ஸை காலி செய்த கூட்டம்  -ரிலையன்ஸ் கம்பெனி என்று ரீல் விட்டு பல கோடியுடன் ஓட்டம்

டெல்லியில் உள்ள ரன்ஹோலாவில் விகாஸ் நகரில் விஷால், விததா மற்றும் அமித் அனைவரும் இர்பான் என்பவருடன் சேர்ந்து ஒரு போலி கால் சென்டர் நடத்தி 2.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டனர் .

“பத்தே நிமிஷத்துல பர்சனல் லோன் தர்றோம்”பலர் பர்ஸை காலி செய்த கூட்டம்  -ரிலையன்ஸ் கம்பெனி என்று ரீல் விட்டு பல கோடியுடன் ஓட்டம்
அவர்கள் முதலில் உங்களுக்கு நாங்கள் ரிலையன்ஸ் கம்பனிலேர்ந்து பேசுறோம்னு உங்கள தொடர்பு கொள்வார்கள் .பிறகு உங்களுக்கு எத்தனை கோடி ருபாய் வேணும்னாலும் பர்சனல் லோன் பத்தே நிமிஷத்துல தர்றோம்னு கதை விடுவார்கள் ,நீங்களும் அதை நம்பி லோன் வேணும்னு சொல்லிட்டா போதும் ,உடனே உங்களுக்கு போலியான ரிலையன்ஸ் முத்திரையுடன் கூடிய லெட்டரில் ,சில ஆவணங்களை கேட்டு மெயில் அனுப்புவார்கள் .பிறகு அந்த வரி ,இந்த வரின்னு 2 லட்சம் அளவுக்கு உங்க கிட்ட பணத்தை கறந்து விடுவார்கள் .
அதற்கு பிறகு லோன் என்னாச்சுன்னு நீங்க அவுங்களுக்கு போன் பன்னிங்கன்னா, அவுங்க போன் சுவிட்ச் ஆப் செஞ்சிட்டு அடுத்த இளிச்சவாயனை தேடி பிடிக்க கெளம்பிடுவாங்க .இப்படியாக அவுங்க பல நூறு பேரிடம் ஏமாற்றி 2.5கோடி ரூபாயை கடந்த இரண்டு வருஷத்துல ஆட்டய போட்டிருக்காங்க
இந்த கூட்டத்தினை போலீஸ் வலை விரித்து பிடித்து, அந்த கூட்டத்தை சேர்ந்த விஷால், விததா , அமித் மற்றும் இர்பான் ஆகியோரை கைது செய்தார்கள் .

“பத்தே நிமிஷத்துல பர்சனல் லோன் தர்றோம்”பலர் பர்ஸை காலி செய்த கூட்டம்  -ரிலையன்ஸ் கம்பெனி என்று ரீல் விட்டு பல கோடியுடன் ஓட்டம்