திண்டுக்கல் அருகே துப்பாக்கியுடன் சுற்றிய போலி உதவி ஆணையர் கைது!

 

திண்டுக்கல் அருகே துப்பாக்கியுடன் சுற்றிய போலி உதவி ஆணையர் கைது!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே காரில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த போலி உதவி ஆணையரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அபோது, காவல்துறை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரில் இருந்த நபர் தன்னை காவல் துணை ஆணையர் என்று கூறி, அடையாள அட்டையை காட்டி உள்ளார். மேலும், தனது வாகனத்தை செல்ல அனுமதிக்குமாறு மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.

திண்டுக்கல் அருகே துப்பாக்கியுடன் சுற்றிய போலி உதவி ஆணையர் கைது!

அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் சென்னை கொளத்தூரை சேர்ந்த விஜயன் என்பதும், உதவி ஆணையர் என போலி அடையாள அட்டை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

மேலும், அவரை சோதனையிட்டத்தில் அவரிடம் கைத்துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தகவல் அறிந்த திண்டுக்கல் ஏடிஎஸ்பி சந்திரன், பட்டிவீரன் பட்டி காவல் நிலையத்தில் வைத்து விஜயனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். துப்பாக்கியுடன் போலி காவல்துறை அதிகாரி பிடிபட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.