கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 3 பேருக்கு மயக்கம் : தஞ்சையில் பரபரப்பு!

 

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட  3 பேருக்கு மயக்கம் : தஞ்சையில் பரபரப்பு!

தஞ்சையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மூவர் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட  3 பேருக்கு மயக்கம் : தஞ்சையில் பரபரப்பு!

தமிழகம் முழுவதும் 2 ஆம் டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கியது. ஜனவரி 16ல் முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு 28 நாட்களுக்கு பிறகு 2வது டோஸ் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரியில் 220 பேருக்கு இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் 3 முன்கள பணியாளர்கள் திடீரென மயக்கமடைந்தனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அப்பகுதியில் தீயாக பரவி வருகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட  3 பேருக்கு மயக்கம் : தஞ்சையில் பரபரப்பு!

இதுகுறித்து பாதிக்கப்பட்ட முன்களப்பணியாளர்களின் உறவினர்கள் கூறும்போது, கொரோனா தடுப்பூசி போடவேண்டாம் என்று கூறியதாகவும், ஆனால் மருத்துவமனை நிர்வாகம் வலுக்கட்டாயமாகதடுப்பூசி போட்டதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.