“பாடம் நடத்தும்போது பலான படத்தை போடுறானுங்களே” -ஆன்லைன் வகுப்பில் அரங்கேறும் ஆபாசங்கள்

 

“பாடம் நடத்தும்போது பலான படத்தை போடுறானுங்களே” -ஆன்லைன் வகுப்பில் அரங்கேறும் ஆபாசங்கள்

ஒரு மகளிர் கல்லூரியின் ஆன் லைன் வகுப்பில் திடீரென ஆபாச படம் ஓடியதால் அங்கு ஆன்லைனில் படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் ஆன் லைன் வகுப்பில் திடீரென ஆபாச படம் ஓடியதால், அதைக் கண்டு அங்கு ஆன்லைனில் படிக்கும் மாணவர்கள் மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள் .அதனால் அந்த கல்லூரியின் பேராசிரியர்கள் அக்கல்லூரி நிர்வாகத்திடம் இது பற்றி புகார் அளித்தார்கள் .
அதன் பேரில் கல்லூரி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது .அப்போது அந்த கல்லூரியில் படிக்கும் சில மாணவ மாணவிகள் தங்களின் பாஸ்வோர்டுகளை வெளியே இருக்கும் சிலரோடு பகிர்ந்து கொண்டுள்ளனர் .அந்த கடவுச்சொற்களை பெற்ற சில விஷமிகள் இப்படி ஆசிரியர்கள் பாடம் நடத்தி கொண்டிருக்கும்போது திடீரென ஆபாச படங்களை ஒளிபரப்பியுள்ளராகள் என்று கண்டறியப்பட்டது .மேலும் சிலர் ஆன்லைன் வகுப்பு நடக்கும்போது திடீரென வெற்றுடம்போடு நடுவே வந்து செல்கிறார்கள் ,இதனால் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கடும் அவஸ்தையாக இருக்கிறது .
” ஐடி மற்றும் கடவுச்சொல்லை வெளியாட்களுடன் பகிர்ந்து கொண்ட மாணவிகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளோம். மாணவிகள் அவமானப்படுவதை நாங்கள் விரும்பாததால் இந்த விஷயத்தை போலீசில் தெரிவிக்கவில்லை” என்று மூத்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
ஆயினும், பி.ஏ. முதல் ஆண்டு மாணவி ஒருவர், “இந்த மாதிரி ஊடுருவலுக்கு எங்களை குற்றம் கூற கூடாது. ஏனெனில் ஆன்லைன் வகுப்புகளை ஹேக் செய்வது மிகவும் எளிதானது ஆனால் கல்லூரி அதிகாரிகள் எங்களை குற்றம் சாட்டுகிறார்கள். எந்தவொரு மாணவியும் கடவுச்சொல்லை பிறரிடம் பகிர்ந்து கொள்வதால் வரும் சிக்கலை விரும்பமாட்டார்கள்”என்று கூறினார் .

“பாடம் நடத்தும்போது பலான படத்தை போடுறானுங்களே” -ஆன்லைன் வகுப்பில் அரங்கேறும் ஆபாசங்கள்