நிஜ முகம் தெரியும் வகையில் முக கவசம் – கேரளாவில் அசத்தும் ஸ்டுடியோ

 

நிஜ முகம் தெரியும் வகையில் முக கவசம் – கேரளாவில் அசத்தும் ஸ்டுடியோ

கொச்சி: கேரளாவில் நிஜ முகம் தெரியும் வகையில் ஒரு ஸ்டுடியோ கடையில் முக கவசம் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் நான்காவது கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. சுகாதார பாதுகாப்புக்காக முககவசம் அணிந்தாலும் அதை அணிவதில் அசவுகரியங்கள் ஏற்படுகின்றன. மேலும் விதவிதமாக, வித்தியாசமான துணிகளில் முககவசங்கள் தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது.

அந்த வகையில் கேரளாவின் கோட்டயம் பகுதியில் ஒரு டிஜிட்டல் ஸ்டுடியோ உரிமையாளர் வித்தியாசமான முயற்சியை செய்து வருகிறார். அதன்படி நிஜ முகம் தெரியும் வகையில் முககவசத்தை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். இதற்காக டி-ஷர்ட்களில் பிரிண்ட் செய்வது போல 3டி முறையில் முக கவசத்தில் வாடிக்கையாளர்களின் முகத்தின் மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை பிரிண்ட் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் முக கவசம் அணியும்போது பாதி முகம் மறையும் பிரச்சனை இல்லை.