நீலகிரியில் மொத்தம் 283 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு : மாவட்ட ஆட்சியர்

 

நீலகிரியில் மொத்தம் 283 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு  : மாவட்ட ஆட்சியர்

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நல்ல மழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனையடுத்து நேற்று கோவை மற்றும் நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீலகிரியில் மொத்தம் 283 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு  : மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டத்தில் இன்னும் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் நீலகிரி மாவட்டத்துக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. அம்மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 283 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை மீட்டு தங்க வைக்க 500 முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 பேர் கொண்ட பேரிடர் குழு சென்னையில் இருந்து வரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.