”நான் யாரு தெரியுமா?” காவல்துறை உதவி ஆணையரை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ

 

”நான் யாரு தெரியுமா?” காவல்துறை உதவி ஆணையரை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ

இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பல்வேறு பிரமுகர்கள் கொரனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

”நான் யாரு தெரியுமா?” காவல்துறை உதவி ஆணையரை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ

இந்நிலையில் பணிகளை முடித்துக்கொண்டு தனது இல்லத்திற்கு திரும்புவதற்காக தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட தயாரான முதலமைச்சரின் கான்வாய் அருகில் யாரையும் அனுமதிக்காத நிலையில், திடீரென ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் முதலமைச்சர் கால்வாயின் அருகே செல்ல முற்பட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுருந்த உதவி ஆணையர் கொடி லிங்கம், சார் நீங்க யார்? என எழிலனை பார்த்து கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த எழிலன் உதவி ஆணையரை மிரட்டியபடி, ஸ்டாலின் கார் அருகே சென்று அவரை வழியனிப்பினார். பின்னர் காவலர்கள் அருகே வந்த எழிலன் யார் அது என்னை பார்த்து யார் நீங்க? என கேட்டது என குரலை உயர்த்தினார். அதற்கு நான் தான் கேட்டேன் என உதவி ஆணையர் கொடி லிங்கம் கூறினார். அது எப்படி என்னை பார்த்து யார் நீங்க கேட்பீர்கள்? மரியாதையோடு நடந்துக்கொள்ளுங்கள்! என மீண்டும் குரலை உயர்த்தி பேசினார்.

அத்தனை ஊடகங்கள் மற்றும் காவலர்கள் மத்தியில் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் காவல்துறை அதிகாரியை தரக்குறைவாக நடத்தியது அங்கிருந்தவர்களை முகம்சுழிக்க வைத்தது.