கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூல்! அப்பாசாமி மருத்துவமனை அங்கீகாரம் ரத்து!

 

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூல்! அப்பாசாமி மருத்துவமனை அங்கீகாரம் ரத்து!

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த புகாரில் சென்னை அரும்பாக்கம் அப்பாசாமி மருத்துவமனை அங்கீகாரத்தை சுகாதாரத்துறை ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் முதற்கட்டமாக கொரோனா சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வந்தது. ஆனால் நாளாக நாளாக தீவிரம் அதிகரித்து வந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை க்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் 112 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளாக அரசு அறிவித்தது. ஆனால் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்து தனியார் மருத்துவமனைகளில் அதிகபட்சமாக வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அதாவது நாள் ஒன்றுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களுக்காக ரூபாய் 15,000 கட்டணம் வசூலிக்கலாம் அதேபோல் லேசான அறிகுறியுடன் வருபவர்களுக்கு ரூபாய் 1500 கட்டணம் என்றும் தொற்று அறிகுறி இல்லாமல் சிகிச்சை பெற வருபவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் கட்டணம் எனவும் அவர் அறிவித்தார். அதிகபட்சமாக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி எச்சரித்திருந்தார்.

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூல்! அப்பாசாமி மருத்துவமனை அங்கீகாரம் ரத்து!

இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் அப்பாசாமி மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு 18 நாட்கள் சிகிச்சைக்கு 12.5 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அதில் 2.5 லட்சம் வசூலிக்கப்பட்டது சுகாதாரத்துறையின் ஆய்வில் உறுதியானது. இதையடுத்து அப்பாசாமி மருத்துவமனையின் கோவிட் சிகிச்சைக்கான அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.