குன்னூர் அருகே நாட்டுவெடி வெடித்து விபத்து – தொழிலாளி படுகாயம்

 

குன்னூர் அருகே நாட்டுவெடி வெடித்து விபத்து – தொழிலாளி படுகாயம்

நீலகிரிது

குன்னூர் அருகே காட்டுப்பன்றிகளை தடுக்க வைத்திருந்த நாட்டுவெடிகள் வெடித்து சிதறியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த கோத்தகிரி கொணவக்கரை பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவர் அங்குள்ள காப்பி தோட்டம் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், தோட்டத்திற்கு வரும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவதற்காக அவுட்காய் எனப்படும் நாட்டு வெடிகளை வீட்டில் வைத்திருந்து உள்ளார்.

குன்னூர் அருகே நாட்டுவெடி வெடித்து விபத்து – தொழிலாளி படுகாயம்

இந்த நிலையில், நேற்று சுப்ரமணி வீட்டில் இருந்தபோது எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகள் திடீரென வெடித்து சிதறின. இதில், சுப்ரமணி பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக சுப்ரமணியை மீட்டு ஊட்டி அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். வெடி விபத்து குறித்து கோத்தகிரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.