பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து : 5 தொழிலாளிகள் பரிதாப மரணம்!

 

பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து : 5 தொழிலாளிகள் பரிதாப மரணம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அந்த பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கட்டிடம் சேதமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து : 5 தொழிலாளிகள் பரிதாப மரணம்!

அவர்களுள் சிலர் படுகாயம் அடைந்திருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது மருத்துவமனையில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் பணி தொடரும் நிலையில், வெடி விபத்திற்கான காரணம் குறித்த எந்த தகவலும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.