தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 5 பெண்கள் உயிரிழப்பு

 

தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 5 பெண்கள் உயிரிழப்பு

மதுரை

மதுரை அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அடுத்துள்ள செங்குளம் பகுதியில் அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.

தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 5 பெண்கள் உயிரிழப்பு
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

இங்கு 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் நிலையில், உயரே சென்று வெடிக்கக்கூடிய பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தபோது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 5 பெண்கள் உயிரிழப்பு

இதில், லட்சுமி, அய்யம்மாள், சுருளியம்மாள்,வேல்தாய் உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தனர். மேலும், 2 பெண் தொழிலாளர் உள்ளிட்ட 3 பேர் 80 சதவீத தீக்காயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 5 பெண்கள் உயிரிழப்பு

சம்பவ இடத்திற்கு, விருதுநகர் மற்றும் திருமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள டி.கல்லுப்பட்டி போலீசார், ஆலை உரிமையாளர் அழகர்சாமி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். காவல்துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதியைப் பெற்று தயாரிக்கக்கூடிய பேன்சி ரக பட்டாசுகளை விதிமுறையை மீறி தயாரித்தது தெரியவந்துள்ளது.