சிவகாசியில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து!

 

சிவகாசியில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து!

சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

சிவகாசியில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று பட்டாசு ஆலையில் விபத்தில் 19 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. காக்கிவாடன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். பட்டாசுகள் வெடித்து சிதறிவருவதால் யாரும் அருகில் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகாசியில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து!

முன்னதாக நேற்று பிற்பகல் சாத்தூர் அருகே இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 19 தொழிலாளிகள் பலியாகினர். அத்துடன் 29 பேர் படுகாயமடைந்த நிலையில் 2 பேர் அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர். இந்த சூழலில் காக்கிவாடன்பட்டியில் மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.