திடீர் ரெய்டு ஏன்? என்ன சிக்கியது?- வருமான வரித்துறையினர் விளக்கம்

 

திடீர் ரெய்டு ஏன்? என்ன சிக்கியது?- வருமான வரித்துறையினர் விளக்கம்

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக – திமுக கட்சிகள் தொடர்ந்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆட்சியை எப்படியாவது தக்க வைத்து கொள்ள வேண்டும் என அதிமுகவும், எப்படியாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிட வேண்டும் என திமுகவும் முனைப்பு காட்டி வருகின்றன. தீவிர பிரச்சாரம் ஒருபுறம் அனல் பறந்துகொண்டிருக்கும் வேலையில், மறுபுறம் பணம் பட்டுவாடா உள்ளிட்ட பல முறைகேடுகள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் கடந்த சில வாரங்களாக வருமானவரித் துறையினர் தீவிர வேட்டையில் இறங்கி உள்ளனர்.

திடீர் ரெய்டு ஏன்? என்ன சிக்கியது?- வருமான வரித்துறையினர் விளக்கம்

இந்நிலையில் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் 3 குழுமங்கள், தனி நபர்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் வரி ஏய்ப்பு ஆவணங்கள் சிக்கியுள்ளன. சில குழுமங்கள், தனிநபர்கள் அரசியலில் பண விநியோகத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானதையடுத்து சோதனையில் ஈடுபட்டதாக வருமான வரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.