ஊடகத்தை உலுக்கும் போலி ஃபாலோயர்ஸ்(followers) விவகாரம் -நடிகைகள் தீபிகா படுகோனே ,ப்ரியங்கா சோப்ராவிடம் விசாரணை நடத்தப்படலாம்..

 

ஊடகத்தை உலுக்கும் போலி ஃபாலோயர்ஸ்(followers) விவகாரம் -நடிகைகள் தீபிகா படுகோனே ,ப்ரியங்கா சோப்ராவிடம் விசாரணை நடத்தப்படலாம்..

கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் ஒருவரிடம் காசு கொடுத்து தன்னை புகழ்ந்து பேச சொல்லியதும் ,கௌண்டமணி அவரிடம் ‘நீ வாங்குற அஞ்சி,பத்துக்கு இதெல்லாம் தேவையா?” என்று பேசுவார் .அதை போல இன்று சோசியல் மீடியாவில் பல பிரபலங்கள் தங்களை லட்சக்கணக்கானோர் பின்தொடர்வதாக காமிக்க இதற்கென செயல்படும் சில போலியான வெப்சைட்டில் பணம் கொடுத்து போலியான நபர்களை விலைக்கு வாங்கிய விவகாரம் இப்போது பாலிவுட்டை உலுக்கி வருகிறது .

ஊடகத்தை உலுக்கும் போலி ஃபாலோயர்ஸ்(followers) விவகாரம் -நடிகைகள் தீபிகா படுகோனே ,ப்ரியங்கா சோப்ராவிடம் விசாரணை நடத்தப்படலாம்..இப்போது போலி சமூக ஊடகங்களைப் பின்தொடர்பவர்களை(followers ) விற்பனை செய்யும் சுமார் 100 நிறுவனங்களை சைபர் கிரைம் கண்டறிந்தது. போலி பின்தொடர்பவர்களை(followers ) விற்கும் 68 நிறுவனங்களையும், மறு ட்வீட், லைக்குகள், சந்தாக்கள், கருத்துகள் போன்ற போலி சமூக ஊடக நடவடிக்கைகளையும் இப்போது சைபர் க்ரைம் அடையாளம் கண்டுள்ளது.

ஊடகத்தை உலுக்கும் போலி ஃபாலோயர்ஸ்(followers) விவகாரம் -நடிகைகள் தீபிகா படுகோனே ,ப்ரியங்கா சோப்ராவிடம் விசாரணை நடத்தப்படலாம்..
அதன் தொடர்ச்சியாக பாலிவுட் பின்னணி பாடகி பூமி திரிவேதியின் போலி சுயவிவரத்தை உருவாக்கிய ஒருவரை கடந்த வாரம் மும்பை போலீசார் கைது செய்தனர் .இந்த போலி சமூக ஊடகப் பின்தொடர்பவர்கள் (followers )வழக்கில் பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே ஆகியோரை மும்பை போலீசார் விசாரிக்க வாய்ப்புள்ளது.

ஊடகத்தை உலுக்கும் போலி ஃபாலோயர்ஸ்(followers) விவகாரம் -நடிகைகள் தீபிகா படுகோனே ,ப்ரியங்கா சோப்ராவிடம் விசாரணை நடத்தப்படலாம்..

போலி பின்தொடர்பவர்களைக்(followers ) கொண்ட முதல் 10 பிரபலங்களில் தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் அடங்குவதாக பல்வேறு பிரபலமான அமைப்புகளால் பல்வேறு ஆய்வுகள் உள்ளன என்பதை மும்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.