டாஸ்மாக் கடையில் காலாவதியான பீர் விற்பனை! இளைஞர்கள் அதிர்ச்சி…

 

டாஸ்மாக் கடையில் காலாவதியான பீர் விற்பனை! இளைஞர்கள் அதிர்ச்சி…

காஞ்சிபுரம் அருகே டாஸ்மாக் கடையில் காலாவதியான பீர் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் மது குடிப்போர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரம் அடுத்த களியனூர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் இரு பீர் பாட்டில் வாங்கினர். அதனை குடித்தபோது ஒரு விதமான துர்நாற்றம் வீசியது. சிறிதளவு குடித்த பிறகு அதில் புளிப்பு தன்மையும் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வாலிபர்கள் பீர் பாட்டிலை ஆய்வு செய்தனர். அப்போது கடந்த 17 நாட்களுக்கு முன்பே காலாவதியான பீர் பாட்டில்களை டாஸ்மாக் நிர்வாகம் விற்பனை செய்தது தெரியவந்தது.

டாஸ்மாக் கடையில் காலாவதியான பீர் விற்பனை! இளைஞர்கள் அதிர்ச்சி…

டாஸ்மாக் நிர்வாகம் முறையாக கணக்கெடுப்பு எடுத்து பழைய சரக்குகளை அப்புற்படுத்தி விட்டு புதிய சரக்குகளை விற்பனை செய்ய வேண்டும் என மது குடிப்போர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து காஞ்சிபுரம் டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரன் கேட்கும்பொழுது காலாவதியான பீர் பாட்டில் தவறுதலாக விற்பனை செய்யப் பட்டிருக்கக் கூடும். காலாவதியான பீர் பாட்டில்களை கணக்கெடுப்பு செய்வதற்காகவே தனியாக குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.