1,31,113 கிளை அஞ்சல் நிலையங்களிலும் இனி இதெல்லாம் செயல்படுமாம்!

 

1,31,113 கிளை அஞ்சல் நிலையங்களிலும் இனி இதெல்லாம் செயல்படுமாம்!

ஒரு காலகட்டத்தில் செய்தியை அனுப்புவதற்கான ஒரே வழி கடிதங்கள்தாம். அவற்றைச் சுமந்துவரும் தபால்காரரின் வருகைக்காகக் காத்திருந்தோம். ஆனால், அப்போதே வெறும் தகவல் பரிமாற்ற துறையாக மட்டுமல்லாமல் பணம் சேமிக்க உதவவும் செய்தது அஞ்சல் துறை.

ஆனால், நவீன ஊடகங்களின் வளர்ச்சியால் சற்று தொய்விலிருக்கும் அஞ்சல் துறையை மேம்படுத்த மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இப்போது அது அறிவித்திருக்கும் திட்டம் பொதுமக்களுக்கு, குறிப்பாக கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு ரொம்பவே உதவியாக இருக்கும்.

1,31,113 கிளை அஞ்சல் நிலையங்களிலும் இனி இதெல்லாம் செயல்படுமாம்!

கிராமப் பகுதிகளில் 1,31,113  கிளை அஞ்சலகங்கள் உள்ளன. தபால் சேவைகள், விரைவு அஞ்சல்கள், பார்சல்கள், மின்னணு மணியார்டர், கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு  போன்ற சேவைகளுடன், இந்தக் கிளை அஞ்சலகங்கள் சேமிப்புக் கணக்கு, தொடர் வைப்பு நிதி, நீண்டகால வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி கணக்கு திட்டங்கள் ஆகிய சேவைகளை இதுவரை அளித்து வருகின்றன.

மத்திய அரசின் தற்போதைய புதிய உத்தரவின்படி கிளை அஞ்சலகங்கள் பி.பி.எப், மாதாந்திர வருவாய்த் திட்டம், தேசிய சேமிப்புப் பத்திரம், கே.வி.பி. மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்களின் சேவைகளையும் அளிக்கும். நகர்ப்புற மக்கள் தபால் நிலையங்களில் பெறக் கூடிய அனைத்து சேமிப்புத் திட்டங்களையும், கிராமப்புறங்களில் வாழும் மக்களும் இனிமேல் பெற முடியும். வரவேற்பைப் பெற்றிருக்கும் சேமிப்புத் திட்டங்களில் மக்கள் தங்கள் பணத்தை கிராமங்களிலேயே போட்டு வைத்துக் கொள்ள முடியும்.

1,31,113 கிளை அஞ்சல் நிலையங்களிலும் இனி இதெல்லாம் செயல்படுமாம்!

அனைத்து தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களையும் மக்களின் வீட்டுக்கே கொண்டு போய் சேர்த்திருப்பதன் மூலம், கிராமப்புற இந்தியாவுக்கு அதிகாரம் அளிப்பதற்கு இந்தத் துறை மேற்கொண்டுள்ள மற்றொரு முக்கியமான நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

இப்போது செல்போன் சிக்னல் கிடைக்காத கிராமங்களிலும் அஞ்சல் துறை முழுமையாகச் செயல்பட்டு வருகிறது. இந்தச் சேமிப்புத் திட்ட விரிவுபடுத்தல் மூலம் அதன் சேவை இன்னும் வலுப்பெறும்.