மீண்டும் ஆட்சியை அலங்கரிக்கும் அதிமுக!!

 

மீண்டும் ஆட்சியை அலங்கரிக்கும் அதிமுக!!

நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் 5 முனை போட்டி நிலவியது. அதபடி அதிமுகவின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி, திமுகவின் சார்பில் மு.க.ஸ்டாலினும் முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு தேர்தலை சந்தித்தனர். அமமுக சார்பில் டி.டி.வி தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டு களமிறங்கினர். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளிலும் பெருந்தலைகள் இல்லாததால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இந்த தேர்தல் ஏற்படுத்தியிருந்தது. தேர்தலுக்கு கருத்துக்கணிப்புகளும், கள நிலவரங்களும் அதிமுக – பாஜக கூட்டணி வரலாறு காணாத தோல்வியைச் சந்திக்கும் என தெரிவித்திருந்தன.

மீண்டும் ஆட்சியை அலங்கரிக்கும் அதிமுக!!

இந்த சூழலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, அதிமுகவே மீண்டும் தமிழகத்தை ஆளும் என்பது உறுதியாகியுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இரு கட்டங்களாக ஒவ்வொரு தொகுதியிலும் 500 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுகவே மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது.

மீண்டும் ஆட்சியை அலங்கரிக்கும் அதிமுக!!