நாளை இவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கிலிருந்து விலக்கு!
May 15, 2021, 22:10 IST1621096823000
தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து கொரோனா நிவாரண நிதிக்கு தான். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 இரண்டு தவணையாக வழங்கப்படுமென அறிவித்தார். அதில், முதல் தவணையை இம்மாதமே கொடுக்க அவர் உத்தரவிட்டார். அதன் படி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் ரூ.2000க்கான டோக்கன் விநியோகம் செய்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாளை கோவிட் நிவாரணத் தொகையான ரூ 2000/- பெற டோக்கன்கள் பெற்றுக்கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் நாளை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.