“அதிமுகவை அபகரிக்க முயற்சிக்கும் சசிகலா” தீர்மானம் நிறைவேற்றம்

 

“அதிமுகவை அபகரிக்க முயற்சிக்கும் சசிகலா” தீர்மானம் நிறைவேற்றம்

அதிமுகவில் உறுப்பினராக கூட இல்லாத சசிகலா, அதிமுகவை அபகரிக்கும் நோக்கிலும், சாதி உணர்வை தூண்டும் விதத்திலும், கட்சி தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்படுவதாக ஈரோடு புறநகர் மாவட்ட கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

“அதிமுகவை அபகரிக்க முயற்சிக்கும் சசிகலா” தீர்மானம் நிறைவேற்றம்

கோபிச்செட்டி பாளையம் அடுத்துள்ள கவுந்தப்பாடியில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் வீட்டில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில், முன்னாள் அமைச்சர் கேசி.கருப்பணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சசிகாலவிற்கு கண்டனம் தெரிவித்ததோடு, அதிமுகவிற்கும், சசிகலாவிற்கும் எவ்வித தொடர்பும், சம்பந்தமும் இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அதிமுகவில் உறுப்பினராக கூட இல்லாத சசிகலா, அதிமுகவை அபகரிக்கும் நோக்கிலும் சாதி உணர்வை தூண்டும் விதத்திலும், கட்சி தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது.