“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” – 549 பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றம்!

 

“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” – 549 பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றம்!

சட்டமன்ற தேர்தலுக்கு முன் ” உங்கள் தொகுதியில் ஸ்டாலின் ” என்ற பெயரில் மாவட்ட வாரியாக மக்களிடம் மொத்தம் 400000 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” – 549 பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றம்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் இந்த கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், ஷில்பா பிரபாகர் ஐ.ஏ.எஸ் சிறப்பு அதிகாரியாக நியமித்து, கோரிக்கை மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி, முதற்கட்டமாக, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டம் மூலம் 549 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மனுவை பிரித்த 12 நாட்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், பெறப்பட்ட மனுக்களில் 0.14% அளவுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில், மனுக்கள் நிறைவேற்றப்பட்டதற்கான ஆணையை 14 நபர்களிடம் இன்று முதலமைச்சர் வழங்கினார். இந்த திட்டம் மூலம் பயனடைந்தவர்கள் முதலமைச்சருக்கு வாழ்த்தும், நன்றிகளும் தெரிவித்துக்கொண்டனர்.