ஆட்சியர் அலுவலகத்திற்கு பேனருடன் வந்த நபரால் பரபரப்பு

 

ஆட்சியர் அலுவலகத்திற்கு பேனருடன் வந்த நபரால் பரபரப்பு

கோவை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, கையில் பேனருடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் சோமனூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் சூர்ய பிரகாஷ்(23), கடந்த தீபாவளி தினத்தன்று நண்பர்களுடன் பவானி அணைக்கு குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த நிலையில், தனது மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி கையில் பேனருடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். இதனை கண்டு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

ஆட்சியர் அலுவலகத்திற்கு பேனருடன் வந்த நபரால் பரபரப்பு

அப்போது, தனது மகனின் மரணம் குறித்த விவரங்களை தற்போது வரை போலீசார் அளிக்கவில்லை என்றும், பிரேத பரிசோதனை அறிக்கையும் வழங்கப்படாததால் சந்தேகம் ஏற்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இதுகுறித்த உண்மை தெரியும் வரை, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனை அடுத்து, துரைசாமியிடம் இருந்த பேனரை வாங்கிக்கொண்ட போலீசார், அவரை மனு அளிப்பதற்காக அனுப்பி வைத்தனர்.