காதை கடித்து துப்பிய ஆசாமி…ராஜபாளையத்தில் பரபரப்பு!!

 

காதை கடித்து துப்பிய ஆசாமி…ராஜபாளையத்தில் பரபரப்பு!!

குடிபோதையில் தகராறு செய்ததை தட்டி கேட்ட நபரின் காதை ஒருவர் கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையம் மலையடிப்பட்டி எம்.கே.டி நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் தச்சு பட்டறை தொழில் செய்து வருகிறார். இவர் வீட்டின் அருகே சில மாதங்களுக்கு முன்பூ ராமமூர்த்தி என்பவர் வாடகைக்கு குடியேறியுள்ளார். இந்த சூழலில் நேற்று இரவு ராமமூர்த்தி குடிபோதையில் தாய் மற்றும் சகோதரனிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது ராமமூர்த்தி தகாத வார்த்தையால் அவர்களை திட்டி தீர்த்துள்ளார்.

காதை கடித்து துப்பிய ஆசாமி…ராஜபாளையத்தில் பரபரப்பு!!

பெண்கள் அதிகம் இருக்கும் பகுதியில் ஆபாச வார்த்தையில் பேசாதீர்கள் என்று மாரியப்பன், ராமமூர்த்தியை தட்டிக்கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில தகராறு முற்றிய நிலையில் ராமமூர்த்தி, மாரியப்பனின் இடது காதை கடித்து துப்பியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாரியப்பன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காதை கடித்து துப்பிய ஆசாமி…ராஜபாளையத்தில் பரபரப்பு!!

இதுகுறித்து வடக்கு காவல் போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் ராமமூர்த்தி மற்றும் உறவினர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.