சிறந்த புலனாய்வு! 6 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு விருது

 

சிறந்த புலனாய்வு! 6 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு விருது

சிறந்த புலனாய்வுக்காக தமிழகத்தை சேர்ந்த 6 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 6 பேரில் 5 பேர் மகளிர் காவல் ஆய்வாளர்கள் என்பது கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட, 21 பெண் காவல் துறை அதிகாரிகளுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம், குற்றப் புலனாய்வில் சிறந்த செயல்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, 2018ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. புலனாய்வில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில், 2020ம் ஆண்டுக்கான புலனாய்வில் சிறப்பாக பணியாற்றியதற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

2020ம் ஆண்டுக்கான புலனாய்வில் சிறப்பாக பணியாற்றியதற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதக்கங்கள் 121 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த புலனாய்வு! 6 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு விருது

சிபிஐ அலுவலர்கள் 15 பேர், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்டிரா காவல் துறையைச் சேர்ந்த தலா 10 பேர், உத்தரப்பிரதேச காவல்துறையைச் சேர்ந்த 8 பேர், கேரளா மற்றும் மேற்குவங்காள காவல்துறைகளைச் சேர்ந்த தலா 7 பேர் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், குற்ற வழக்குகளை சிறப்பான முறையில் விசாரித்ததற்காக 6 தமிழக காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 6 காவல் அதிகாரிகளில் 5 மகளிர் காவல் ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

,ஜி. ஜான்சி ராணி, எம்.கவிதா, ஏ.பொன்னம்மாள், சி.சந்திரகலா, ஏ.கலா ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த 5 காவல் துறை ஆய்வாளர்களும் இந்த விருதை பெறுகிறார்கள். தமிழக காவல்துறை துணை ஆய்வாளர் டி.வினோத் குமாரும் இந்த விருது பெறுகிறார்.

மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் ஏ. கண்ணன் இந்த விருதினை பெறுகிறார்.