10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் – அமைச்சர் செங்கோட்டையன்

 

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் – அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதிவரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை ஒத்தி வைக்குமாறு பலர் கருத்து தெரிவித்தனர். அதனால் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி பொதுத் தேர்வை நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னரே, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து விட்டது. தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.