“வாலிபர்களுக்கு வலை வீசி ,ஆசையாக பேசி ..’-முன்னாள் டீச்சரின் மோக வலையில் வீழ்ந்த பல வாலிபர்கள்

 

“வாலிபர்களுக்கு வலை வீசி ,ஆசையாக பேசி ..’-முன்னாள் டீச்சரின் மோக வலையில் வீழ்ந்த பல வாலிபர்கள்


ஒரு பள்ளியில் பணிபுரிந்த டீச்சர் ஒருவர் பல வாலிபர்களுக்கு மோக வலை விரித்து பணம் கறந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது .

கிழக்கு பெங்களூரில் உள்ள தேவையா பூங்காவில் வசிக்கும் 38வயதான கவிதா என்பவர் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தார் .அவர் மீது பல புகார்கள் குவிந்ததால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார் .அதன் பிறகு அந்த டீச்சர் மேட்ரிமோனியல் சைட் மூலம் பல வாலிபர்களுக்கு வலைவீசி அவர்களுடன் ஆசையாக பேசி ,அவர்களோடு நெருக்கமாகயிருந்து அந்த காட்சிகளை பதிவு செய்வார் . அதன் பிறகு அந்த காட்ச்சிகளை காண்பித்து அவர்களிடம் பணம் கேட்டு பிளாக் மெயில் செய்வார் .இப்படியாக அவரிடம் பல வலிபர்கள் ஏமாந்து பணத்தை இழந்துள்ளார்கள் .
இதற்கிடையே இந்திராநகரில் வசிக்கும் பிரேம் டேனியல் என்பவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார் .அவரை கவிதா ,மேட்ரிமோனியல் தளத்தில் சந்தித்தார் .அதன் பிறகு இருவரும் சில மாதங்களாக ஊடகத்தின் மூலமாகவும் .போன் மூலமாகவும் அரட்டையடித்து தங்களின் உறவை வளர்த்து வந்தார்கள் .
அதனால் கடந்த மாதம் ஒருநாள் கவிதா அந்த டேனியலின் வீட்டிற்கு சென்றார் .அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளார்கள் அப்போது கவிதா அந்த அந்தரங்க தருணத்தை படம் பிடித்துள்ளார் .பின்னர் அந்த காட்சியை காமித்து அவரை மிரட்டி 5 லட்சம் பணம் கேட்டார் .ஆனால் டேனியல் அந்த பணத்தை தர மறுத்த போது போலீசில் கற்ப்பழிப்பு புகார் அவர் மீது கொடுப்பதாக மிரட்டினார் .பின்னர் டேனியல் அந்த பெண் மீது போலீசில் புகாரளித்தார் .மேலும் அவர் போலீசாரிடம் அந்த பெண் அவரை பணம் கேட்டு மிரட்டிய ஆடியோவை ரெகார்ட் செய்து ஒப்படைத்தார் .அதன் பேரில் கவிதாவை கைது செய்த போலீசார் ,அவர் இன்னும் எத்தனை பேரிடம் இது போல மோசடி செய்துள்ளார் என்று விசாரித்து வருகிறார்கள் .

“வாலிபர்களுக்கு வலை வீசி ,ஆசையாக பேசி ..’-முன்னாள் டீச்சரின் மோக வலையில் வீழ்ந்த பல வாலிபர்கள்