நாம் தமிழர் கட்சியின் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைகிறார்!

 

நாம் தமிழர் கட்சியின் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைகிறார்!

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய பேராசிரியர். கல்யாண சுந்தரம் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர், இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பேராசிரியர். கல்யாணசுந்தரம். சீமானுக்கு அடுத்தபடியாக கட்சியில் செல்வாக்கு மிகுந்தவராக காணப்பட்ட கல்யாண சுந்தரத்திற்கு சீமானுக்கும் இடையே சமீபத்தில் உரசல் ஏற்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைகிறார்!

ஒருகட்டத்தில் இருவருக்குமான மோதல் வெடிக்கவே தனது சாவை எதிர்நோக்கி காத்திருந்தவர் கல்யாணசுந்தரம் என வெளிப்படையாக அறிவித்தார் சீமான். அத்துடன் பேராசிரியர் கல்யாணசுந்தரம் , வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் தனக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்யாணசுந்தரம் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார்.

நாம் தமிழர் கட்சியின் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைகிறார்!

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக இருந்த கல்யாணசுந்தரம் இன்று அதிமுகவில் இணைந்தார். இவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகின. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்து வந்தது. தற்போது பேராசிரியர் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணையவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.