ஆந்திராவில் முன்னாள் அமைச்சர் கொரோனாவால் மரணம்

 

ஆந்திராவில் முன்னாள் அமைச்சர் கொரோனாவால் மரணம்

கொரோனா நோய்த் தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவை வாட்டி எடுக்கிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு. இதையடுத்து நோய்த் தொற்றுவது கட்டுப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எண்ணிக்கை குறைந்த பாடில்லை. மாறாக நாள்தோறும் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. தொடக்கத்தில் ஆந்திராவில் நோய்த் தொற்று கண்டறியப்பட்டதும் அம்மாநில அரசு உஷாரானது. உடனே களத்தில் இறங்கி பாதுகாப்பு அம்சங்களை விரைவு படுத்தியது. அதனால், ஆந்திராவில் ஓரளவு கட்டுக்குள் இருந்தது கொரோனா. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக ஆந்திராவிலும் கோரோனா நோய்த் தொற்று அதிகரிக்கும் வேகம் உயர்ந்துவருகிறது.

ஆந்திராவில் முன்னாள் அமைச்சர் கொரோனாவால் மரணம்

ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 9276 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை  1 லட்சத்து 50 ஆயிரத்து 209 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 72,188 பேர் தொடர்ந்து மருத்துவமனைய சிகிச்சை பெற்று வருகின்றனர். 76, 614 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 58 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,407 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்நிலையில் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் முன்னாள் அறநிலைத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான மானிக்யாலா ராவ் கொரோனால் உயிரிழந்தார். கடந்த ஒரு மாதமாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.