கிணற்றில் தவறி விழுந்து, ஓபிஎஸ் உறவினர் பலி!

 

கிணற்றில் தவறி விழுந்து, ஓபிஎஸ் உறவினர் பலி!

தேனி

பெரியகுளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் காமாட்சி அம்பலம். இவரது மகன் அன்பரசன். இவர் முன்னாள் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் ஆவார். இந்த நிலையில், அன்பரசன் இன்று காலை தனது விவசாய தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

கிணற்றில் தவறி விழுந்து, ஓபிஎஸ் உறவினர் பலி!

அப்போது, பல் விளக்குவதற்காக கிணற்றின் அருகில் இருந்த மரத்தில் குச்சி ஒடிக்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்த அன்பரசன் நீரில் மூழ்கினார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் கிணற்றில குதித்து தேடிய போது, அன்பரசன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் பெரியகுளம் தென்கரை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதி செய்து விசாரித்து வருகின்றனர்.