மணிகண்டனின் உதவியாளர்களும் தலைமறைவு : போலீஸ் தேடுதல் வேட்டை!

 

மணிகண்டனின் உதவியாளர்களும் தலைமறைவு : போலீஸ் தேடுதல் வேட்டை!

பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் உதவியாளர்களும் தலைமறைவாகியுள்ளனர்.

மணிகண்டனின் உதவியாளர்களும் தலைமறைவு : போலீஸ் தேடுதல் வேட்டை!

நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது போலீசில் புகார் அளித்தார்.. அதில் மணிகண்டன் தன்னுடன் ஐந்து வருடம் திருமணம் ஆகாமல் குடும்பம் நடத்தி வந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியபோது , அவர் அடித்து துன்புறுத்துவதாகவும், அவரால் மூன்று முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டார். இந்த விவகாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகை சாந்தினி தனக்கு யார் என்று தெரியாது என்று மணிகண்டன் மறுப்பு தெரிவித்தார்.

மணிகண்டனின் உதவியாளர்களும் தலைமறைவு : போலீஸ் தேடுதல் வேட்டை!

அத்துடன் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான மணிகண்டனை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை போலீசார் ராமநாதபுரம், மதுரை என விரைந்து சென்று தேடி வருகின்றனர். அதேசமயம் அவரது முன்னாள் உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்டவர்களையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். மதுரையில் மணிகண்டன் உறவினர் வீட்டில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் தனிப்படை போலீசார் மதுரைக்கு விரைந்தனர். ஆனாலும் மணிகண்டனை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் நடிகை பாலியல் புகார் வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் உதவியாளர்களும் தலைமறைவாகியுள்ளனர். தங்களது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு ஓட்டுநர், உதவியாளர்கள் தலைமறைவாக உள்ளனர். அனைத்து செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில் மணிகண்டன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இதனால் தனிப்படை போலீசார் மணிகண்டனை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.