“அந்த பெண் யாருன்னே எனக்கு தெரியாது” : முன்னாள் அதிமுக அமைச்சர் விளக்கம்!

 

“அந்த பெண் யாருன்னே எனக்கு தெரியாது” : முன்னாள் அதிமுக அமைச்சர் விளக்கம்!

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் நானும் கடந்த 5 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினோம். நான் அவரால் 3 முறை கர்ப்பமாக்கப்பட்டு, அவரின் வற்புறுத்தலின் பேரில் கருவை கலைத்துள்ளேன்.

“அந்த பெண் யாருன்னே எனக்கு தெரியாது” : முன்னாள் அதிமுக அமைச்சர் விளக்கம்!

தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றும் அவர், எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார். என் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டுகிறார் என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வாட்ஸ்அப் சேட்டுகளை வெளியிட்டுள்ளார்.

“அந்த பெண் யாருன்னே எனக்கு தெரியாது” : முன்னாள் அதிமுக அமைச்சர் விளக்கம்!

இந்நிலையில் நடிகை சாந்தினி தன் மீது அளித்துள்ள புகாருக்கு பதிலளித்துள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அந்த பெண் யாரென்றே எனக்கு தெரியாது. அவர்கள் மிரட்டி பணம் பறிக்கும் பாலியல் தொழில் செய்யும் கும்பல். அவர்கள் என்னிடம் 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர். பிறகு 2 கோடி, 1 கோடி என பேரம் பேசி 10 லட்சம் ரூபாய் வரை கேட்டனர். நான் ஒரு ரூபாய் கூட தரமுடியாது என்று கூறிவிட்டேன். இந்த கும்பல் பல நடிகர், இயக்குனர்களிடம் இப்படி கூறி பணம் பறித்துள்ளது. நான் அமைச்சராக இருந்த போது பலர் என்னுடன் புகைப்படம் எடுத்து கொள்கின்றனர். அந்த புகைப்படத்தை வைத்து எடிட் செய்து இது போன்ற பணம் பறிக்கும் காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நான் தவறு செய்யவில்லை; அதனால் எனக்கு பயமில்லை என்று கூறியுள்ளார்.