சிக்கிய ஆதாரங்கள்… கிடுக்குப்பிடி விசாரணையில் ஆசிரியர் ராஜகோபாலன்!

 

சிக்கிய ஆதாரங்கள்… கிடுக்குப்பிடி விசாரணையில் ஆசிரியர் ராஜகோபாலன்!

சென்னை புழல் சிறை பகுதியில் இயங்கி வரும் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், அவரிடம் பயிலும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. ஆன்லைன் வகுப்புகளின் போது அவர் அரைகுறை ஆடை அணிந்து வருவதாகவும் வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாசப் படங்களின் லிங்குகளை அனுப்புவதாகவும் மாணவிகளிடம் வாட்ஸ் அப் மூலம் ஆபாசமாக பேசுவதாகவும் அடுக்கடுக்காக புகார்கள் குவிந்தன.

சிக்கிய ஆதாரங்கள்… கிடுக்குப்பிடி விசாரணையில் ஆசிரியர் ராஜகோபாலன்!

அந்த பள்ளியில் படித்த மாணவி ஒருவர், ராஜகோபாலன் மாணவிகளிடம் வாட்ஸ் அப்பில் தவறாக பேசிய ஸ்கீரீன் ஷாட்டுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து, ராஜகோபானுக்கு எதிராக அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான், இன்று காலை மேலும் இரண்டு மாணவிகள் ராஜகோபாலனுக்கு எதிராக புகார் அளித்தனர்.

சிக்கிய ஆதாரங்கள்… கிடுக்குப்பிடி விசாரணையில் ஆசிரியர் ராஜகோபாலன்!

இந்த நிலையில், ராஜகோபலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ராஜகோபாலனிடம் தொடர் விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். மாணவிகளுக்கு ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பல தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.