‘எவிக்‌ஷன் ஃப்ரீ பாக்ஸ்’ சுயநலமாக முடிவெடுக்கும் ஹவுஸ் மேட்ஸ்; கைப்பற்றப்போவது யார்?

 

‘எவிக்‌ஷன் ஃப்ரீ பாக்ஸ்’ சுயநலமாக முடிவெடுக்கும் ஹவுஸ் மேட்ஸ்; கைப்பற்றப்போவது யார்?

பிக் பாஸ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல்வர் புரோமோ வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் தொடங்கிய பிக் பாஸின் பங்கேற்றிருக்கும் 16 ஹவுஸ் மேட்ஸின் உண்மையான முகம், ஒவ்வொரு டாஸ்க் மூலமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை கோவமே படாத ரியோ, நேற்று தன்னை சாடியதற்காக சுரேஷ் சக்கரவர்த்தியை எதிர்த்தார். இது ஒருபுறமிருக்க சனம், ஷிவானி, ரேகா, சம்யுக்தா, ரம்யா பாண்டியன், ஆஜித் ஆகியோர் இந்த வார எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

‘எவிக்‌ஷன் ஃப்ரீ பாக்ஸ்’ சுயநலமாக முடிவெடுக்கும் ஹவுஸ் மேட்ஸ்; கைப்பற்றப்போவது யார்?

இந்த நிலையில், பிக் பாஸ் சீசனில் முதன்முறையாக எவிக்‌ஷன் ஃப்ரீ பாக்ஸ் என்ற டாஸ்க் அறிமுகம் செய்யப்படுவது போல இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில், தகுதி இல்லாதவர்கள் பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட சம்யுக்தா , கேபி, ஷிவானி உள்ளிட்ட 8 பேரும் அந்த பாக்ஸை கைப்பற்ற சுயநலமாக முடிவெடுக்கின்றனர். முதலில் ஷிவானி அந்த ரூமில் இருந்து வெளியேற்றப்படுகிறார். கடைசியில் ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட, ரியோ கைத்தட்டி வரவேற்பது போல புரோமோ முடிகிறது.

‘எவிக்‌ஷன் ஃப்ரீ பாக்ஸ்’ சுயநலமாக முடிவெடுக்கும் ஹவுஸ் மேட்ஸ்; கைப்பற்றப்போவது யார்?

வழக்கமாக மக்கள் தான் பிக் பாஸ் ஹவுஸில் இருந்து யார் வெளியேற்றப்பட வேண்டும் என முடிவு செய்வார்கள். ஆனால், இந்த முறை எவிக்‌ஷன் ஃப்ரீ பாக்ஸ்ஸை கைப்பற்றுபவர்கள் எவிக்‌ஷனில் இருந்து தப்பிக்க முடியுமாம்.