’கொரொனா கட்டுக்குள் வரும்வரை பெருங்கூட்டம் கூட அனுமதி அளிக்கக்கூடாது’ கி.வீரமணி

 

’கொரொனா கட்டுக்குள் வரும்வரை பெருங்கூட்டம் கூட அனுமதி அளிக்கக்கூடாது’ கி.வீரமணி

கொரோனா நோய்த் தொற்று இந்திய அளவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகமும் இதற்கு விதி விலக்கல்ல. இந்நிலையில் பள்ளி, கோவில் என மக்கள் அதிகம் புழங்கும் இடங்களைத் திறக்க நடக்கும் ஆலோசனைகளைக் குறித்து கேள்வி எழுப்புகிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

அவர் வெளியிட்ரிருக்கும் அறிக்கையில் உலக அளவில் கொரோனா பரவலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது! பாதிக்கப்பட்டவர்கள் தொகை 11 லட்சத்தைக் கடந்துள்ளது; பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரம் ஆகும்

’கொரொனா கட்டுக்குள் வரும்வரை பெருங்கூட்டம் கூட அனுமதி அளிக்கக்கூடாது’ கி.வீரமணி

இந்நிலையில், நமது மத்திய – மாநில ஆட்சியாளர்கள் உலக நாடுகளில் பாதித்த நாடுகளின் பாதிப்பு – நம் நாட்டின் உயிர்ப் பலியோடு ஒப்பிடுகையில், நம்முடைய நாட்டில்  குறைவானதுதான் என்று விகிதாச்சார கணக்கைக் காட்டி, தாம் மேற்கொண்ட பல முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதை  வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்குவது ஏனோ?

ஒவ்வொரு உயிரும் முக்கியம் – இழப்புகளை எளிதில் ஏற்பது இயலாத ஒன்று என்ற நிலையில், தன்முனைப்புக்கு இடந்தராது, பல நல்ல ஆய்வுகளை – பல மருத்துவ வல்லுநர்கள் முதல் பல்துறை அறிஞர்கள் கூறியதை புறந்தள்ளாது அனைத்துத் தரப்பினரது கருத்துகளையும் – அதை அரசுகளுக்கு எதிரான விமர்சனங்கள் என்று கருதாது; கவலையுற்றவர்களின் ஆர்வம் மிக்க கருத்துகள் என்றே சிந்தித்து உத்திகளை – தேவைப்படும்பொழுது மாற்றிக் கொள்ளவும் தயங்கக்கூடாது!

’கொரொனா கட்டுக்குள் வரும்வரை பெருங்கூட்டம் கூட அனுமதி அளிக்கக்கூடாது’ கி.வீரமணி

  1. மாணவர்கள் தேர்வுகள் எழுதுவதோ அல்லது நிலைமை சீராகும்முன் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக் கழகங்களைத் திறப்பதோ உயிருடன் விளையாடும் மிகப்பெரிய விபரீத விளையாட்டு ஆகும்!

‘சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்‘ என்ற பழமொழிக்கொப்ப, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உயிர் இருந்தால்தான் படிப்பையே தொடர வாய்ப்பு ஏற்படும். இளம்பிள்ளைகளையும் அத்தொற்று பாதித்துள்ள செய்திகள் வரும் நிலையில், இப்படி மாணவர்களை அலைக்கழிப்பது தேவையா? யாருக்குக் கல்வி – அவர்களுக்குத்தானே – அவர்கள் உடல்நலத்திற்குத்தானே முன்னுரிமை – இந்நிலையில் அவசரம் காட்டுவது புத்திசாலித்தனமா?

  1. அதுபோல, கோவில்கள் திறப்பதை – மக்கள் கூடும் திருவிழாக்கள் நடத்துவதை முன்பு தடை செய்தது சரியானது. கொஞ்ச காலத்திற்கு – நிலைமை கட்டுக்குள் முழுமையாக வரும் வரையில் எந்த இடத்திலும் மக்கள் பெருங்கூட்டமாகக் கூட அனுமதிக்கவே கூடாது!

திருமண விழாக்களில் கட்டுப்பாடு, சவ அடக்கம் நிகழ்வுகளில் கட்டுப்பாடு என்று வரும்போது, இப்போது பக்தி என்ற பெயரால், மத விழாக்களுக்கு கட்டுப்பாடற்று கூடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்துவது தேவையா?

’கொரொனா கட்டுக்குள் வரும்வரை பெருங்கூட்டம் கூட அனுமதி அளிக்கக்கூடாது’ கி.வீரமணி

சரத்பவாரின் கேள்விக்கு என்ன பதில்?

அயோத்தியில் இராமர் கோவில் அடிக்கல்பற்றி தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் அவர்கள், ‘‘இந்த கொரோனா காலத்தில் இதுதான் முக்கிய பணியா?’’ என்று கேட்டுள்ளார். அதற்கு என்ன பதில்?

எப்பகுதி – வடநாடு – தென்னாடு ஆனாலும் மக்களின் உயிர் – மனித உயிர்களின் மதிப்பு முக்கியம்தானே!

இந்நேரத்தில் அரசியல் பார்வை தவிர்க்கப்பட்டு, மனிதநேயமே முன்னுரிமையும், முதலிடமும் பெறவேண்டியது அவசர அவசியம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.