முதல்வர் செயல் நாயகன்; ஸ்டாலின் அறிக்கை நாயகன் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

 

முதல்வர் செயல் நாயகன்; ஸ்டாலின் அறிக்கை நாயகன் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தேசியக் கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் மாநிலக் கட்சிகள்தான் கூட்டணி தலைமையை ஏற்கும் என்று அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

முதல்வர் செயல் நாயகன்; ஸ்டாலின் அறிக்கை நாயகன் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும்கட்சி, எதிர்கட்சிகள் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகஎ அமைச்சர் ஆர். பி. உதயகுமார், “முதல்வர் செயல் நாயகன் என்பதால் செயல்படுகிறார். அறிக்கை நாயகன் என்பதால் ஸ்டாலின் அறிக்கை கேட்கிறார். ஸ்டாலின் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ளவே வெள்ளை அறிக்கை; கருப்பு அறிக்கை கேட்கிறார் என்று கூறிய அவர், தேசியக் கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் மாநிலக் கட்சிகள்தான் கூட்டணி தலைமையை ஏற்கும்” என்று விளக்கமளித்துள்ளார்.

முதல்வர் செயல் நாயகன்; ஸ்டாலின் அறிக்கை நாயகன் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

இதனிடையே திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “அரசு தனக்கு தானே பாராட்டுப் பத்திரம் வாசிப்பது கானல் நீரில் விண்மீன்களை பிடித்துவிட்டேன் என்ற கற்பனையை விஞ்சுகிறது.. முதலமைச்சரும், அமைச்சர்களும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை காற்றில் பறக்க விடுகின்றனர்.கொரோனா பரவலைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என உயர் நீதிமன்றமே கேள்வி எழுப்பும் நிலை உருவாகியுள்ளது. தோல்வியை திசை திருப்ப முதலமைச்சர் போடும் நாடகங்கள் எடுபடாது. இதுவரை அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள், வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கொரோனா முதலீடு குறித்தும் தனியாக ஒரு வெள்ளை அறிக்கையை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும்” என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .