“சூரப்பா ரிட்டையர்டு ஆனாலும் விட மாடோம்… தப்பிக்கவே முடியாது” – கலையரசன் ஆணையம் கிடுக்குப்பிடி!

 

“சூரப்பா ரிட்டையர்டு ஆனாலும் விட மாடோம்… தப்பிக்கவே முடியாது” – கலையரசன் ஆணையம் கிடுக்குப்பிடி!

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் ஊழல் புகார்கள் எழுந்தன. தகுதியில்லாதவர்கள் பணி நியமனம், கல்லூரிக்கு வாங்கிய பொருட்களில் முறைகேடு என சூரப்பாவுக்கு எதிராக புகார்கள் குவிந்தன. சூரப்பா துணைவேந்தராக நியமிக்கப்பட்டதிலிருந்தே அரசுக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் அவர் தன்னிச்சையாகச் செயல்பட்டது மோதலை மேலும் வலுக்கச் செய்தது.

“சூரப்பா ரிட்டையர்டு ஆனாலும் விட மாடோம்… தப்பிக்கவே முடியாது” – கலையரசன் ஆணையம் கிடுக்குப்பிடி!

சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை தமிழக அரசு நியமித்தது. சூரப்பாவுக்கு ஆளுநர் பன்வாரிலாலின் ஆதரவு இருந்தபோது, சூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகாரில் முகாந்திரம் இருப்பதாக கலையரசன் குழு தெரிவித்து பரபரப்பைக் கிளப்பியது. தற்போது ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து கலையரசன் கூறியிருக்கிறார்.

“சூரப்பா ரிட்டையர்டு ஆனாலும் விட மாடோம்… தப்பிக்கவே முடியாது” – கலையரசன் ஆணையம் கிடுக்குப்பிடி!

அவர் கூறுகையில், ‘‘சூரப்பா மீதான விசாரணை, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது பல்கலைக்கழக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை 15 நாட்களில் முடித்து தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். சூரப்பா பணி ஓய்வுபெற்று சென்றாலும் (நாளையோடு ஓய்வு) விசாரணைக்கு அழைத்தால் கட்டாயமாக நேரில் ஆஜராக வேண்டும்’’ என்றார்.