“அமித்ஷா வந்தாலும் தமிழகத்தில் திமுக தான் ஆட்சி அமைக்கும்”- கே.என்.நேரு பேட்டி

 

“அமித்ஷா வந்தாலும் தமிழகத்தில் திமுக தான் ஆட்சி அமைக்கும்”- கே.என்.நேரு பேட்டி

திருச்சி

உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தாலும், மூன்றாவது அணி அமைந்தாலும் தமிழகத்தில் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அவர், அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு,கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து குறித்தும், அவர்கள் எந்ததெந்த சின்னங்களில் போட்டியிடுவது என்பது குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் முடிவுசெய்து அறிவிப்பார் என்று கூறினார்.
அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பதில் சொல்லாமல், தங்களுக்கு பட்டப்பெயர் வைப்பதால் என்ன பயன்? என கேள்வி எழுப்பிய அவர், இதன் மூலம் குற்றச்சாட்டை அவர்கள் ஒத்துக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

“அமித்ஷா வந்தாலும் தமிழகத்தில் திமுக தான் ஆட்சி அமைக்கும்”- கே.என்.நேரு பேட்டி


மேலும், பாஜக மேற்கு வங்கத்தையும், தமிழ்நாட்டையும் குறிவைத்து உள்ளதாக தெரிவித்த கே.என்.நேரு, மூன்றாவது அணி அமைந்தாலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தாலும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் பாஜகவின் திட்டம் எடுபடாது என்ற அவர், மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவுசெய்து விட்டார்கள் என்றும் தெரிவித்தார்.