ஸ்டாலின் வேனில் ஐடி ரெய்டு… மௌனம் கலைத்த எ.வ.வேலு!

 

ஸ்டாலின் வேனில் ஐடி ரெய்டு… மௌனம் கலைத்த எ.வ.வேலு!

அரசியல் வட்டாரத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது திமுக முக்கிய புள்ளி எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் அதிரடியாக நடந்த ஐடி ரெய்டு தான். இரு நாட்களாகத் தொடர்ந்து ரெய்டு இன்று நிறைவுற்றது. திமுகவின் நிதி ஆதாரமே வேலு தான் என்பதால் திமுக வேட்பாளர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர். சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. திமுக தலைவர்களும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பாஜகவும் எடப்பாடியும் கூட்டுச்சதி செய்து இதுபோன்று ஐடி துறையினரை ஏவிவிடுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

ஸ்டாலின் வேனில் ஐடி ரெய்டு… மௌனம் கலைத்த எ.வ.வேலு!

தற்போது சோதனையில் என்ன நடந்தது என்பது குறித்து வேலு மௌனம் கலைத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்லியிலிருந்து உத்தரவிடப்பட்டே வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் திமுகவின் வெற்றி வாய்ப்பைக் குலைத்துவிட முடியாது. மாறாக மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியிருக்கிறது. எனக்கு இருக்கும் வருத்தம் என்னவென்றால் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்ய விடாமல் முடக்கிவிட்டார்கள். அதை ஈடுகட்ட நேரம் காலம் பார்க்காமல் தூங்காமல் கூட வெற்றி பெற உழைப்பேன்.

ஸ்டாலின் வேனில் ஐடி ரெய்டு… மௌனம் கலைத்த எ.வ.வேலு!

திருவண்ணாமமலை மாவட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் எட்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார். அது அவர்களுக்குத் தெரியாதா? இன்று அவர் பிரச்சாரத்துக்கு வருவது முன்கூட்டியே தெரியும் அல்லவா? ஆக இதன்மூலம் அதிகார துஷ்பிரயோகம் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்சியின் தலைவர் வந்துள்ளார். அவர் வேனையே பரிசோதனை செய்தார்கள். ஸ்டாலின் தங்கியிருக்கும் அறையையே பரிசோதனை செய்தார்கள். தோல்வி பயத்தால் இதை எல்லாம் அவர்கள் செய்கிறார்கள்” என்றார்.