ஈரோடு: வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்
Oct 28, 2020, 21:08 IST1603899491000
மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய மோடி அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் – வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பெசாசிறுத்தைவள்ளுவன் தலைமையில் இன்று மாலை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இ தில் கட்சியின் மாநில,மாவட்ட,தொகுதி,ஒன்றிய,நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தோழமை இயக்கத்தினரும் கலந்து கொண்டனர்.