ஈரோடு: தீபாவளிக்கு 30% போனஸ் வழங்க டாஸ்மாக் ஊழியர் சங்கம் கோரிக்கை
Nov 5, 2020, 00:15 IST1604515502000
தீபாவளி பண்டிகைக்கு 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. ஈரோடு மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் ஆலோசனை கூட்டம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.
சிஐடியுமாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், எல்பிஎப் கோபால், முருகேஷ், சிஐடியு பாண்டியன், பொன்.பாரதி மற்றும் கூட்டுக்குழு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் ஊழியர்களுக்கு 30 சதவீத போனஸ் வழங்க அரசுமுன்வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோட்டில் நாளை மறுதினம் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது,