ஈரோட்டில் பங்குச்சந்தை நிறுவன உரிமையாளர் திடீர் மாயம்… மனைவி புகாரின் பேரில் போலீசார் விசாரணை!

 

ஈரோட்டில் பங்குச்சந்தை நிறுவன உரிமையாளர் திடீர் மாயம்… மனைவி புகாரின் பேரில் போலீசார் விசாரணை!

ஈரோடு

ஈரோட்டில் பங்குச்சந்தை நிறுவன உயிரிமையாளர் மாயமாகிய சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு பெரியசேமூர், எல்லப்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (37). இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரவிக்குமார் கடந்த ஒன்றை வருடமாக பங்குச்சந்தை நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், அவரது பங்குச்சந்தை நிறுவனத்தில் திடீர் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். அவருக்கு மனைவி புவனேஸ்வரி ஆறுதல் கூறி வந்துள்ளார்.

ஈரோட்டில் பங்குச்சந்தை நிறுவன உரிமையாளர் திடீர் மாயம்… மனைவி புகாரின் பேரில் போலீசார் விசாரணை!

இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் ரவிக்குமார் அலுவலகத்திற்கு கிளம்பி சென்றுள்ளார். மதியம் புவனேஸ்வரி போன் செய்து சாப்பிட அழைத்தபோது சிறிது நேரத்தில் வருவதாக கூறியுள்ளார். ஆனால் மாலை ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால், புவனேஸ்வரி மீண்டும் ரவிகுமாருக்கு போன்செய்த போது, அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி கணவரை பல்வேறு இடங்களில் தேடி உள்ளார். ஆனால் ரவிகுமார் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து, அவர் வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் மாயமான தனது கணவரை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்தார். புகாரின் மீது வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.