ஈரோடு: சமூக நீதிக் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம்

 

ஈரோடு: சமூக நீதிக் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம்

அருந்ததியர் மக்களுக்கு நல வாரியம், இட ஒதுக்கீடு வழங்கிட வலியுறுத்தியும், பஞ்சமி நிலங்களை மீட்க சட்டம் இயற்றிட வலியுறுத்தியும் சமூக நீதிக் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் ஈரோட்டில் துவக்கம் – எஸ்டிபிஐ கட்சி பங்கேற்பு
அருந்ததியர் மக்களுக்கு தனி நல வாரியம் அமைத்திட வலியுறுத்தியும், அவர்களுக்கு 6% இட ஒதுக்கீடு வழங்கிட வலியுறுத்தியும், பஞ்சமி நிலங்களை மீட்க அரசு சட்டம் இயற்றி வலியுறுத்தியும் மற்றும் தூய்மை பணிக்கு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

ஈரோடு: சமூக நீதிக் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம்


உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூகநீதிக் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. அதன் துவக்கமாக இன்று ஈரோடு சூரம்பட்டி காவல்நிலையம் அருகில் கையெழுத்து இயக்க துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு: சமூக நீதிக் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம்


இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம், மாவட்ட செயலாளர் முஹம்மது அகில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தலைவர் முனாஃப் ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர்.