முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை அறிவிப்பு

 

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை அறிவிப்பு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை பெற்று கல்வி அறிவினை மேம்படுத்திடவும், கல்வி உதவித்தொகை பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் 2019-2020 ஆம் கல்வியாண்டு முதல் தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை அறிவிப்பு

இதுவரை கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்காத முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள், கல்வி உதவித்தொகை பெற ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0424 – 2263 227 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஆன்லைன் மூலம் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்திருந்தால், அதன் விவரத்தை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் கதிரவன் அறிவுறுத்தி உள்ளார்.