சாலை பணியாளர் சங்கம் சார்பில் நவ.26-இல் வேலை நிறுத்தம் அறிவிப்பு

 

சாலை பணியாளர் சங்கம் சார்பில் நவ.26-இல் வேலை நிறுத்தம் அறிவிப்பு

ஈரோடு

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் கோட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து ஆணை வழங்கவும், சாலை பணியாளர்களின் ஊதியத்தில், 10 சதவீதத்தை

சாலை பணியாளர் சங்கம் சார்பில் நவ.26-இல் வேலை நிறுத்தம் அறிவிப்பு

ஆபத்து படியாக வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் அம்சராஜ், தமிழகத்தில் நெடுஞ்
சாலை பராமரிப்பு பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் 26ஆம் தேதி தேசிய அளவில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.