தீபாவளி தினத்தில் மதுவிற்பனை – 280 வழக்குகள் பதிவு

 

தீபாவளி தினத்தில் மதுவிற்பனை – 280 வழக்குகள் பதிவு

ஈரோடு

ஈரோட்டில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக 280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மது விற்பனை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல்துறையினர் மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டவர்களை மடக்கிப்பிடித்த போலீசார், இதுதொடர்பாக 280 வழக்குகளை பதிவு செய்தனர்.

தீபாவளி தினத்தில் மதுவிற்பனை – 280 வழக்குகள் பதிவு

இதேபோல் மாவட்டம் முழுவதிலும் உள்ள கடைகளில் நடைபெற்ற திடீர் சோதனையில் 150 கடைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.