குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 4 இடைத்தரகர்கள் கைது

 

குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 4 இடைத்தரகர்கள் கைது

ஈரோடு

ஈரோட்டில் பல்வேறு குழந்தை விற்பனை சம்பவங்களில் தொடர்புடைய 3 பெண்கள் உள்பட 4 இடைத்தரகர்களை போலீசார் கைதுசெய்தனர். ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் கருமுட்டை தானம் மற்றும் குழந்தை விற்பனை நடைபெறுவதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பேரிடம், குழந்தைகள் நல அலுலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 4 இடைத்தரகர்கள் கைது

அப்போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்களை கருங்கல்பாளையம் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர்கள், கோவையை சேர்ந்த சங்கரேஸ்வரி, சேலத்தை சேர்ந்த மோகனபப்ரியா, கோகிலா மற்றும் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் 4 பேரும் குழந்தை விற்பனையில் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்ததும், மேலும் தற்போது, ஒரு குழந்தையை வாங்கிச்செல்ல வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து குழந்தை விற்பனை தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீசார், 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.