ஈரோடு- அம்பேத்கர் சிலை அமைக்க கோரி, எஸ்.பி அலுவலகத்தில் மனு
Oct 13, 2020, 10:11 IST1602564085000
ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில் அம்பேத்கருக்கு அரசு சார்பில் முழு உருவ சிலை அமைக்க வலியுறுத்தி, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர்
சிலை அமைப்பு குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், அருந்ததியர் இளைஞர் பேரவை உட்பட 28 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.