அரசின் சாதனை விளக்க கண்காட்சியை கண்டுகளித்த மக்கள்
Oct 23, 2020, 11:47 IST1603433822000
ஈரோடு
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், 46 புதூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின்
சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில், தமிழக அரசின் விலையில்லா அரிசி, விலையில்லா
மடிக்கணினி, தாலிக்கு தங்கம், அம்மா குழந்தை நலப்பெட்டகம், அம்மா
மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்பான
புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், அதிநவீன மின்னணு
வீடியோ வாகனம் மூலம் அரசின் திட்டங்கள், சாதனைகள் மற்றும் கொரோனா தொற்று விழிப்புணர்வு குறித்த அரசின்
செய்திமலர் குறும்படம் மூலம் திரையிடப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.