“ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம் அடுத்த மாதம் துவங்கும்” – கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ

 

“ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம் அடுத்த மாதம் துவங்கும்” – கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ

ஈரோடு

ஈரோடு மாநகரில் நடைபெற்று வரும் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும், இத்திட்டத்தை அடுத்த மாதம் முதலமைச்சர் துவங்கி வைப்பார் என்றும் அதிமுக எம்எல்ஏ கே.வி.ராமலிங்கம் தெரிவித்தார். ஈரோடு மாணிக்கம் பாளையம் பகுதியில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடையை திறந்துவைத்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், ஈரோடு மாநகரில் உள்ள அனைத்து

“ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம் அடுத்த மாதம் துவங்கும்” – கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ

வீடுகளுக்கும் தினசரி குடிநீர் வழங்கும் வகையில் ரூ.500 கோடி மதிப்பிலான இந்த திட்டம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியதாகவும், தற்போது திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் தெரிவித்தார். இத்திட்டத்தில், தற்போது வரை 1.05 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது குடிநீர் பம்ப் செய்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.