முழு கொள்ளளவை எட்டிய ஓடத்துறை ஏரி – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

 

முழு கொள்ளளவை எட்டிய ஓடத்துறை ஏரி – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஈரோடு

கோபிச்செட்டிப்பாளைம் அடுத்துள்ள ஓடத்துறை ஏரி நிரம்பியதால், ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள ஓடத்துறை ஊராட்சியில் 200 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. கீழ்பவானி பிரதான வாய்க்காலில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், அதன் கசிவுநீர் ஓடத்துறை ஏரிக்கு வந்து கொண்டிருந்தது. இதனிடையே கடந்த வாரங்க பெய்த தொடர்மழையினால் நீர்வரத்து அதிகரித்து, ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.

முழு கொள்ளளவை எட்டிய ஓடத்துறை ஏரி – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

இந்த நிலையில் இன்று ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 15 அடியைஎட்டியது. இதனையடுத்து, ஏரிக்கு வரும் 200 கனஅடி நீர் முழுமையாக கால்வாயில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மழை அதிகரித்தால் ஏரியில் திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்படும் என தெரிவத்துள்ள, பொதுப்பணித்துறை அதிகாரிகள், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தி உள்ளனர்.