வடமாநில தொழிலாளி தலையில் கல்லைப்போட்டு படுகொலை!

 

வடமாநில தொழிலாளி தலையில் கல்லைப்போட்டு படுகொலை!

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே வடமாநில தொழிலாளி தலையில் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையம் அருகே வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. நேற்றிரவு பூசாரி கோயிலை பூட்டிச் சென்ற நிலையில், இன்று காலை மீண்டும் திறக்க சென்றார். அப்போது, கோயில் வாயிலில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வர வழைத்து தடயங்களையும் சேகரித்தனர்.

வடமாநில தொழிலாளி தலையில் கல்லைப்போட்டு படுகொலை!

தொடர்ந்து கொலை சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்த நபர் சுமார் 21 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞர் என்பதும், அவர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதனை அடுத்து, கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றிய போலீசார், தப்பியோடிய கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.